யாழ். அளவெட்டியில் வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 25-01-2021 | 2:23 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அளவெட்டி பத்துபனையடி கிராமத்தில் வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டட வேலையில் ஈடுட்டிருந்த போது நேற்று (24) மாலை சுவர் இடிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அளவெட்டி மேற்கு முருங்கயப்புலத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்