ஒரு தொகை மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது

ஒரு தொகை மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது

by Staff Writer 25-01-2021 | 3:35 PM
Colombo (News 1st) மன்னார் - சிலாவத்துறை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, நேற்று (24) மாலை 6.50 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபரிடமிருந்து 1,341 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாவத்துறை பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.