Colombo (News 1st) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (25) முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், திக்வெல்ல - யோனக்கபுர மேற்கு மற்றும் யோனக்கபுர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (25) மாலை 06 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.