பிரதமர் - சபாநாயகர் சந்திப்பு: பாராளுமன்ற அமர்வு தொடர்பில் கலந்துரையாடல்

by Staff Writer 24-01-2021 | 7:05 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பு விஜேராமயிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. COVID தொற்று சவாலுக்கு மத்தியில், எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, பாராளுமன்ற நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ , சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.