விசேட சுற்றிவளைப்பில் 3,520 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 3,520 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 24-01-2021 | 5:24 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,520 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,185 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 830 சாரதிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நேற்றிரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 490 பொலிஸ் பிரிவுகளில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.