27 ஆம் திகதி COVID-19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 23-01-2021 | 2:29 PM
Colombo (News 1st) எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு COVID-19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை - வலல்லாவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அதற்கமைய, இந்தியாவில் தயாரிக்கப்படும் Oxford-Astrazeneca தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் COVID தொற்று ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேயிடம் வினவியபோது, இந்தியாவின் Serum நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Oxford-Astrazeneca  தடுப்பூசியே எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார். சுகாதார துறையினர், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட கொரோனா தடுப்பு செயற்பாட்டில் முன்னின்று செயற்படுவோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.