இந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்கள் கரையோர காவல் பிரிவினரிடம் ஒப்படைப்பு

by Bella Dalima 23-01-2021 | 3:20 PM
Colombo (News 1st) கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்களும் இந்திய கரையோர காவல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இன்று முற்பகல் 10.30 மணியளவில் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார். இந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை நேற்று (22) மேற்கொள்ளப்பட்டது. நீரில் மூழ்கியமையாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். சட்ட நடவடிக்கைகளின் பின்னர் , இந்திய மீனவர்களின் சடலங்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.