English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
23 Jan, 2021 | 4:32 pm
Colombo (News 1st) இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள், கரையோர காவற்படையினர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வுக்குரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் அழிக்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி இலங்கை மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எல்லை தாண்டும் மீனவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் நிலையில், துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட சம்பவத்தில் இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், எல்லை தாண்டிய அத்துமீறல்களை மீனவர்கள் நிரந்தரமாக நிறுத்துவதற்குரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கி கடற்றொழில் அமைச்சினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
26 Feb, 2021 | 03:15 PM
25 Feb, 2021 | 03:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS