கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

by Staff Writer 22-01-2021 | 3:15 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (23) காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1 தொடக்கம் 3 வரையான பகுதிகளிகளிலும், கொழும்பு 07 தொடக்கம் 12 வரையான பகுதிகளிலும் நாளை காலை 09 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினூடாக மேற்கொள்ளப்படும் வெள்ள கட்டுப்பாட்டு செயற்றிட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்காக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான நீர் விநியோகக் குழாய் கட்டமைப்பு மாற்றப்படுவதால் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.