முத்துராஜவல சூழல் பாதிப்பு: ஆராய நிபுணர் குழு

முத்துராஜவல சூழல் பாதிப்பு குறித்து ஆராய நிபுணர் குழு  

by Staff Writer 21-01-2021 | 9:23 AM
Colombo (News 1st) முத்துராஜவல சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலேசானைகளை அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றாடல் அமைச்சு, வனப்பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம், சுரங்கப் பணியகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை கொண்டு இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.