Update : புனானையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் கைது 

by Staff Writer 20-01-2021 | 9:46 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற நோயாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் திகதி சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளரே, நேற்றிரவு (19) தப்பியோடியுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் பொலிஸாரும் கோரியிருந்தனர். இந்தநிலையில், எஹலியகொட - பெல்பிட்டிய பகுதியில் இன்று (20) காலை 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, குறித்த நோயாளர் மீண்டும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், சிகிச்சைகளின் பின்னர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலன்னாவ - மீதொட்ட பகுதியில் உள்ள பேக்கரியான்றில் பணியாற்றும் 43 வயதான ஊழியரே தொற்றுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.