20 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

20 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

by Staff Writer 20-01-2021 | 2:27 PM
Colombo (News 1st) மன்னார் - பெரியகாமம் பகுதியில் 20 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (19) பகல் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, மன்னாரை நோக்கி பயணித்த வேனொன்று சோதனையிடப்பட்ட போது, 10 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 10 பொதிகளிலும் 20 கிலோ 20 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேசாலை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.