மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தர் கொலை வழக்கு

மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தர் கொலை; சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 20-01-2021 | 3:01 PM
Colombo (News 1st) மன்னார் - மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. அதற்கமைய, சந்தேகநபர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் மேலதிக விசாரணை அறிக்கை, சட்ட மருத்துவ அறிக்கை ஆகியன இன்றும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஏனைய செய்திகள்