கடற்றொழில் அமைச்சரை சந்தித்தார் கொரிய தூதுவர்

கடற்றொழில் அமைச்சரை சந்தித்தார் கொரிய தூதுவர்

by Staff Writer 20-01-2021 | 4:36 PM
Colombo (News 1st) இலங்கைக்கான கொரிய தூதுவர் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கொரிய தூதுவர் வூன் ஜின் ஜியோங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளின் அபிவிருத்தி மற்றும் நாடளாவிய ரீதியில் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.