கொரோனா மின் கட்டண சலுகை 

தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கான மின் கட்டண சலுகை 

by Staff Writer 19-01-2021 | 10:06 AM
Colombo (News 1st) தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்த 06 மாதங்கள் சலுகை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதுவரை மின்சார விநியோகத்தை துண்டிக்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சரினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக, கைத்தொழில் மின்சார பாவனையாளர்களுக்கு 06 மாதங்களுக்கு சலுகை வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்துள்ள திரையரங்குகளுக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதிக்குரிய மின்சார கட்டணத்தை சமமான மாத தவணைகளில் ஒரு வருடத்திற்கு செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையில் பதிவு செய்துள்ள தங்குமிடங்களுக்கான 2020 மார்ச் தொடக்கம் 2021 பெப்ரவரி வரையான காலப்பகுதிக்குரிய மின்சார கட்டணத்தை ஒரு வருடத்திற்கு சமமான தவணைக் கட்டணங்களில் மீள செலுத்தவும் அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.