PCol பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி 

by Staff Writer 19-01-2021 | 1:44 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மற்றும் அவற்றை அமுல்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினருக்கு இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.