தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 54,000 கடந்தது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 54,000 கடந்தது

by Staff Writer 19-01-2021 | 7:48 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 54,000 கடந்துள்ளது. இன்று இதுவரை 337 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்களுக்கே புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 54,087 பேருக்கு இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 7,223 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகின்றனர். இதேவேளை, கொரோனா நோயாளர்கள் 774 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46,594 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 வரை உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.