English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Jan, 2021 | 10:06 am
Colombo (News 1st) தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்த 06 மாதங்கள் சலுகை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதுவரை மின்சார விநியோகத்தை துண்டிக்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சரினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக, கைத்தொழில் மின்சார பாவனையாளர்களுக்கு 06 மாதங்களுக்கு சலுகை வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்துள்ள திரையரங்குகளுக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதிக்குரிய மின்சார கட்டணத்தை சமமான மாத தவணைகளில் ஒரு வருடத்திற்கு செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையில் பதிவு செய்துள்ள தங்குமிடங்களுக்கான 2020 மார்ச் தொடக்கம் 2021 பெப்ரவரி வரையான காலப்பகுதிக்குரிய மின்சார கட்டணத்தை ஒரு வருடத்திற்கு சமமான தவணைக் கட்டணங்களில் மீள செலுத்தவும் அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
25 Feb, 2021 | 03:36 PM
25 Feb, 2021 | 08:46 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS