English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Jan, 2021 | 3:42 pm
Colombo (News 1st) ஒரு வருடத்திற்கும் அதிகக் காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று உத்தரவிட்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 13 ஆம் திகதி விதித்த உத்தரவை நடைமுறைப்படுத்தி சந்தேகநபரை பிணையில் விடுவித்த மேலதிக நீதவான், வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, நீதிமன்றத்தில் இடம்பெறும் எந்த வழக்கு நடவடிக்கையையும் ஊடகங்களுக்கு அறிவிக்கக் கூடாதென மேலதிக நீதவான் சந்தேகநபருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கொழும்பு மேலதிக நீதவானால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
30 Jan, 2021 | 07:53 PM
13 Jan, 2021 | 04:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS