தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு

தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு நியமனம் 

by Staff Writer 18-01-2021 | 5:26 PM
Colombo (News 1st) நாட்டின் தேசிய உரிமங்களை பெயரிடுவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினூடாக தொல்பொருள் இடங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட மரபுரிமைகள் தேசிய உரிமங்களாக பெயரிடப்படவுள்ளதாக கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதுவரை நாட்டில் தேசிய உரிமங்களை பெயரிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய உரிமங்களை பெயரிடும் போது அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தௌிவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.