சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸ் சார்ஜன் கைது

சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன் கைது 

by Staff Writer 18-01-2021 | 3:02 PM
Colombo (News 1st) 14 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன் ஒருவர் அநுராதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸ் நிலையத்துடன் இணைந்த வகையில் சேவையாற்றும் 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.