அங்கொடை டிப்போ சாரதிகள் இருவருக்கு கொரோனா

அங்கொடை டிப்போ சாரதிகள் இருவருக்கு கொரோனா

by Staff Writer 18-01-2021 | 2:05 PM
Colombo (News 1st) அங்கொடை இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சாரதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டிப்போ ஊழியர்கள் 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H. பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார். நாட்டில் மேலும் சில பஸ் டிப்போக்களின் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஏனைய செய்திகள்