மீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம் 

by Staff Writer 17-01-2021 | 2:17 PM
Colombo (News 1st) ஓய்வூதியத் திட்டத்திற்காக விவசாயிகள் மற்றும் மீனவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளை இம்மாதம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்காக புதிதாக விவசாயிகள் மற்றும் மீனவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் கடந்த 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகளும் மீனவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளானதாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர், சட்டத்தரணி பிரேமசந்திர ஏப்பா தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கான ஓய்வூதியத்திற்காக, கடற்றொழில் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.