பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பொலிஸ் மா அதிபரின் உறவினர்கள் என கூறி விசாரணைக்கு இடையூறு 

by Staff Writer 17-01-2021 | 2:04 PM
Colombo (News 1st) பொலிஸ் மா அதிபரின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் என தெரிவித்து சிலர் பொலிஸ் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றமை தொடர்பில் பதிவாகியுள்ளது. அவ்வாறான போலி தகவல்களை வழங்குபவர்களுக்கும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் என தெரிவித்து, தொலைபேசியூடாக தகவல்கள் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் ஆராயுமாறு பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.