திலோகம வன பறவைகள் திருட்டு

திலோகம வன பறவைகள் திருட்டு

by Staff Writer 17-01-2021 | 6:01 PM
Colombo (News 1st) அநுராதபுரம் - திலோகம வனப்பகுதியில் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை ரஜ்கம்மன வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி - அக்குரனை பகுதியைச் சேர்ந்த மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 கிளிகள் மற்றும் 5 குருவிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன, சந்தேகநபர்கள் கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து 60,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பறவைகள், கிரிதலே மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.