வைத்தீஸ்வரா கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மீண்டும் ஆரம்பம்

by Staff Writer 16-01-2021 | 5:29 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் தரம்-1 இற்கான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். 1976 ஆம் ஆண்டு முதல் குறித்த பாடசாலையின் ஆரம்ப பாடசாலைக்கான அனுமதி நீக்கப்பட்டது. பாடசாலைக்கான ஆரம்பப் பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 1980 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினூடாக யாழ் - வைத்தீஸ்வரா கல்லூரிக்கான ஆரம்பப்பிரிவு மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.