மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய ஜனாதிபதி மெதிரிகிரிய விஜயம்

by Staff Writer 16-01-2021 | 8:25 PM
Colombo (News 1st) 'கிராமத்துடன் கலந்துரையாடல்' இன்று பொலன்னறுவை - மெதிரிகிரிய, வெடிகச்சிய கிராமத்தில் நடைபெற்றது. கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தின் 6 ஆம் கட்டமாக இன்றைய இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொலன்னறுவை மாவட்ட மக்கள் அதிகளவில் யானைகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் மக்களின் விவசாயம், சுய கைத்தொழில், காணி மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டதுடன், அதிகாரிகள் ஊடாக அதற்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தார்.