by Bella Dalima 15-01-2021 | 2:54 PM
Colombo (News 1st) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் R.A.S.D.ரத்னாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, புதிய தவிசாளர் தெரிவிற்கான கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை பொதுமண்டபத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் 22 உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் R.A.S.D.ரத்னாயக்க தமக்கு ஆதரவாக 12 வாக்குகளைப் பெற்று 02 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.