தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்

by Staff Writer 15-01-2021 | 8:46 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை (16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன. இதனடிப்படையில், எஹலியகொட பொலிஸ் பிரிவின் மின்தான, போபன்எல்ல, விலேகொட, அஸ்கங்குல, யக்குதாகொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், பாணந்துறை பொலிஸ் பிரிவின் 675 தொட்டவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும், பேருவளை பொலிஸ் பிரிவின் மக்கொன கிழக்கு, மக்கொன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை காலை 5 மணி முதல் விடுவிக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.