இலங்கையர்கள் 693 பேர் நாடு திரும்பினர்

இலங்கையர்கள் 693 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 14-01-2021 | 5:26 PM
Colombo (News 1st) COVID-19 தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருந்த இலங்கையர்கள் 693 பேர் இன்று அதிகாலை தாயகம் திரும்பினர். இவர்களில் 290 பேர் ஓமானில் இருந்து வருகை தந்துள்ளனர். இஸ்ரேலில் இருந்து 119 பேரும் தென் கொரியாவில் இருந்து 95 பேரும் நாடு திரும்பியுள்ளனர். ஏனையோர் துபாய், கட்டார், நெதர்லாந்து, மாலைத்தீவு, துருக்கி மற்றும் பாகிஸ்தானில் இருந்தே நாட்டை வந்தடைந்துள்ளனர்.