தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது

by Staff Writer 14-01-2021 | 10:20 PM
Colombo (News 1st) இன்று 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,899 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 6,905 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 43,747 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். நேற்று (13) மூன்று மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய செய்திகள்