பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை

பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு PCR பரிசோதனை

by Staff Writer 13-01-2021 | 5:24 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 463 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்ற பொதுச்செயலாளர் உள்ளிட்ட 448 ஊழியர்கள் இதில் அடங்குவதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் நாளை மறுதினம் (15) காலை 9 மணி முதல் 12 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.