Ndrangheta எனப்படும் குழுவைச் சேர்ந்த 355 சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பிலான பரிசீலனை இன்று (13) ஆரம்பமாகி, 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 1980 ஆம் ஆண்டுகளிலிருந்து இத்தாலியில் எவ்வித குற்றச்சாட்டு விசாரணைகளும் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.