குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு தொடர்பில் விசாரணை

இத்தாலியில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பில் விசாரணை

by Staff Writer 13-01-2021 | 12:24 PM
Colombo (News 1st) இத்தாலியில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் நூற்றுக்கணக்கானோர் தொடர்பிலான விசாரணை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பல தசாப்த காலமாக குறித்த சந்தேகநபர்கள் இத்தாலியில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Ndrangheta எனப்படும் குழுவைச் சேர்ந்த 355 சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இத்தாலியைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பிலான பரிசீலனை இன்று (13) ஆரம்பமாகி, 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 1980 ஆம் ஆண்டுகளிலிருந்து இத்தாலியில் எவ்வித குற்றச்சாட்டு விசாரணைகளும் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.