கொஸ்கொட காட்டுப் பகுதியிலிருந்து 20 கிலோ ஹெரோயின் கைப்பற்றல் 

by Staff Writer 13-01-2021 | 7:42 AM
Colombo (News 1st) கொஸ்கொட காட்டுப்பகுதியில் இருந்து 20 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களால் இந்த ஹெரோயின் ஒழித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பேலியகொடை பகுதியில் 50 கிரோம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசையிலும் 20 கிராம் ஹெரோயினுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.