கல்முனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 2 பொலிஸ் குழுக்கள் 

by Staff Writer 11-01-2021 | 6:01 PM
Colombo (News 1st) அம்பாறை - கல்முனை வீதியில் தனியார் சொகுசு வாகன தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 02 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்று (11) அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் சில வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.