வௌ்ள அனர்த்த அபாய எச்சரிக்கை 

வௌ்ள அனர்த்த அபாய எச்சரிக்கை 

வௌ்ள அனர்த்த அபாய எச்சரிக்கை 

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2021 | 1:56 pm

Colombo (News 1st) அடுத்த 6 மணித்தியாலங்களில் கருவலகஸ்வெவ, வணாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயா பெருக்கெடுக்கும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமையினால், தாழ்நிலப்பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து செக்கனுக்கு 12000 கன அடி நீர், கலா ஓயாவிற்கு திறந்துவிடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்