நாளை முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள் 

நாளை முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள் 

by Chandrasekaram Chandravadani 10-01-2021 | 5:57 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் நாளை (11) முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோத்தமிபுர வீட்டுத்திட்டம், கோத்தமிபுர 24 ஆம் தோட்டம், கோத்தமிபுர 78 ஆம் தோட்டம் ஆகிய பிரதேசங்கள் நாளை (11) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.