நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் 150 மி.மீ வரையான பலத்த மழை

by Staff Writer 10-01-2021 | 4:41 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (10) 150 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் தளம்பல் நிலையே இதற்கான காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.