சுற்றுலா பயணிகள் தொடர்பில் மீண்டும் ஆய்வு

சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுதல் தொடர்பில் மீண்டும் ஆய்வு 

by Staff Writer 10-01-2021 | 2:06 PM
Colombo (News 1st) நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை மீறி சுற்றுலா பயணிகள் அழைத்துவரப்படுவார்களாயின், அவர்களை அழைத்து வருவது தொடர்பில் மீண்டும் ஆராயப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தொ்டர்பில் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். எனினும் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதில் சிக்கல் காணப்படுமாயின், அதற்கு தேவையான ஆலோசனைகளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் வழங்க அமைச்சு தயாராகவுள்ளதாக அவர் கூறினார். சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் பணிகள் சுற்றுலா அமைச்சின் ஊடாக முழுமையாக கண்காணிக்கப்படுவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுதல் தொடர்பில் மீண்டும் ஆய்வு