ஒரு தொகை மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டது

ஒரு தொகை மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டது

by Staff Writer 10-01-2021 | 3:16 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்படவிருந்த 8,700 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் தொகையானது வட மேல் கடற்பிராந்தியத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (08) இரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 12 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய பிரஜைகளின் இரண்டு படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.