கிரிஉல்ல, பூஜாபிட்டிய பகுதிகள்​ தனிமைப்படுத்தல்

கிரிஉல்ல, பூஜாபிட்டியவின் சில பகுதிகள்​ தனிமைப்படுத்தல்

by Staff Writer 09-01-2021 | 3:04 PM
Colombo (News 1st) கிரிஉல்ல, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுகளில் சில பகுதிகள்​ தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கிரிஉல்ல பொலிஸ் பிரிவில் மும்மான மற்றும் வெத்தேவ ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவில் கொஸ்கொட உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார். COVID-19 தொற்று பரவல் நிலை காரணமாக இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார். இதேவேளை, கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மன்னார் - எருக்கலம்பிட்டி கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் தெரிவித்தார்.