உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் வருகை

by Staff Writer 08-01-2021 | 6:17 PM
Colombo (News 1st) உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய மற்றுமொரு விமானம் இன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இன்று பகல் 2 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர். குறித்த விமானத்தில் 140 உக்ரைன் பிரஜைகள் வருகை தந்ததாகவும் அவர்களை PCR சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ள ஆறாவது சுற்றுலா குழுவினர் இவர்களாவர்.