by Bella Dalima 07-01-2021 | 4:44 PM
Colombo (News 1st) போகம்பறை சிறைச்சாலையின் காவலர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைக்குள் பிரவேசிக்கும் போது முன்னெடுக்கப்படும் சோதனையில் அவர் வசமிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலை காவலர் வசமிருந்து 8.4 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவும் 3.9 கிராம் ஹெரோயினும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
8 வருடங்கள் சேவைக்காலத்தைக் கொண்ட சிறைக்காவலரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருட்களை இடைப்பட்டியில் மறைத்து வைத்திருந்ததாகவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.