ஜெனிவாவில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவது தொடர்பில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்

by Bella Dalima 07-01-2021 | 7:19 PM
Colombo (News 1st) ஜெனிவாவில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் கலந்துரையாடியுள்ளனர். கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூறினர். கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.