கொரோனா மரணம்: தகனம் செய்ய வேண்டும் என பரிந்துரை

கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்ய வேண்டும்: நிபுணர் குழு பரிந்துரை 

by Staff Writer 07-01-2021 | 1:47 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரையானது, எந்தவொரு மத அல்லது பிற காரணங்களுக்காகவும் மாற்றப்படாமல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை தகனம் செய்தல் அல்லது புதைத்தல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்துள்ள இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.