Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு - கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு , ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிலுள்ள 60 ஆம் இலக்க தோட்டமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அவர் கூறினார்.
