கிழக்கு முனையம் தொடர்பில் பாராளுமன்றில் பிரதமர்

by Staff Writer 06-01-2021 | 11:32 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வௌிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு  தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலாக, பாராளுமன்றத்தில் இன்று (06) பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கிழக்கு முனையம் தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கம் சில வௌிநாடுகளுடன் உடன்படிக்கைகளை கைச்சத்திட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.