இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

by Chandrasekaram Chandravadani 06-01-2021 | 6:13 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று (06) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்தவகையில், பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுகம திவனவத்தை கிராம சேவகர் பிரிவு மற்றும் எஹெலியகொடை பொலிஸ் பிரிவின் மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் இன்று (06) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.