by Chandrasekaram Chandravadani 06-01-2021 | 6:40 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக நாட்டின் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட 09 கிராம சேவகர் பிரிவுகளில் இன்று (06) முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 05, அக்கரைப்பற்று 14 மற்றும் நகர்ப்பகுதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று (06) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை 01, ஒலுவில் 02 மற்றும் அட்டாளைச்சேனை 08 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/1, அக்கரைப்பற்று 8/3 மற்றும் அக்கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் இன்று அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் அகற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவெந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.