இந்திய தயாரிப்பிலான தடுப்புமருந்துகள் ஏற்றுமதி

இந்திய தயாரிப்பிலான தடுப்புமருந்துகள் ஏற்றுமதி

by Staff Writer 06-01-2021 | 8:29 AM
Colombo (News 1st) உள்ளூரில் தயாரிக்கப்பட்ட COVID - 19 தடுப்புமருந்துகளை இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. உள்நாட்டின் கேள்விகளை பூர்த்தி செய்வதற்காக, வௌிநாடுகளுக்கு தடுப்புமருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவலை இந்திய வௌிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 60 வீதமான கொரோனா தடுப்புமருந்துகளை இந்தியா தயாரிக்கின்றது. இந்தநிலையில், அதன் ஏற்றுமதியை பல்வேறு நாடுகள் எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அவசர பயன்பாட்டுக்காக, இரண்டு கொவிட் தடுப்புமருந்துகளுக்கு இந்தியா அனுமதியளித்திருந்தது. மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை இம்மாதம் ஆரம்பிப்பதற்கு இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஜூலை மாதமளவில் சுமார் 300 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்புமருந்து வழங்குவதே இந்தச் செயற்றிட்டத்தின் இலக்காகும்.